Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் பத்து வயது சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி மெனிக்கும்புர பிரதேசத்திலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி தனது சிறிய தந்தையுடன் மெனிக்கும்புர பகுதியில் அமைந்துள்ள வாராந்த சந்தையொன்று வந்த போதே, சிறுமின் அருகில் வந்த வான் ஒன்றில் இருந்த சிலர் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுமியின் சிறிய தந்தை அவர்களிடமிருந்து போராடி சிறுமியை மீட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக கடுகஸ்தொட பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
அவர் வழங்கிய தகவலை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடத்திய பொலிஸார் வாகன இலக்கத்தின் மூலம் குறித்த சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
மேற்படி மூவரும் பங்காளாதேஷ் பிரஜைகள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago