Editorial / 2019 நவம்பர் 25 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, நாட்டை விட்டு அனுமதியின்றி வெளியேறியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான உத்தரவை பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்துக்கு பிறப்பித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு நேற்று (24) வெளியேறியிருந்தார்.
மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் நேற்று (24) பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிஷாந்த டி சில்வா விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago