Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 வெளிநாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (05) இரவு 10 மணி முதல் இன்று (06) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியர்கள் 82 பேர், பாகிஸ்தானியர்கள் 12 பேர், மாலைத்தீவு பிரஜைகள் 10 பேர், நைஜீரியர்கள் 08 பேர், பங்களாதேஷ் பிரஜைகள் 06 பேர், 04 சீன பிரஜைகள், 04 கனேடிய பிரஜைகள், 02 தாய்லாந்து பிரஜைகள், 02 சுவிட்சர்லாந்து பிரஜைகள் இதன்போது, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அமெரிக்கா, கட்டார், சுவீடன், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒவ்வொரு பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டவர்களில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago