2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை யாத்திரிகள் இருவர் இந்தியாவில் மரணம்

Super User   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர் இருவர் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயா மலைச்சிகரங்களில் ஏறும்போது இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதனா விதானபதி ரணனாவதி - கும்கேஷ்வரி குன்றில் ஏறும்போது மயங்கிவிழுந்து இறந்துள்ளார். மற்றொரு இலங்கையர் கிதுகுட் குன்றில் ஏறும்போது சுவாசக்கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இருவரின் சடலங்களும் இந்தயி மகாபோதி சமூக நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இந்திய மாவட்ட அதிகாரிகள் இது குறித்து இலங்கை உயர் ஸ்தானிகரலாயத்திற்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

50 பேர் கொண்ட இலங்கையர் குழுவுடன் யாத்திரை மேற்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இறந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .