2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தகவல் உத்தியோகத்தர்கள் பதவிற்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நிலவும் தகவல் உத்தியோகத்தர்கள் பதவிற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகவல் திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
 
போட்டிப் பரீட்சை மூலம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கோரியுள்ளது.
 
தமிழ் மொழி மூல வெற்றிடங்கள் யாழ்பாணம் -02, நுவரெலியா, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 01 என மொத்தம் 07 ஆகும்.
 
சிங்கள மொழி மூல வெற்றிடங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா 01 என மொத்தம் 07 எனவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .