Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள காங்கேசன்துறை, தல்செவன சுற்றுலா விடுதி அமைந்துள்ள கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் முக்கிய இரண்டு கடற்கரைகளாக விளங்கும் கசூரினா மற்றும் சாட்டி ஆகியன காணப்படுகின்ற போதிலும், காங்கேசன்துறைக் கடற்கரையின் அழகு மற்றும் கடலின் தெளிவு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்துள்ளமையால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது. குடும்பமாகச் சென்று கடற்கரையில் பொழுதைக் கழிப்பதையும் விருந்தினர் விடுதியில் உணவருந்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
6 minute ago
10 minute ago
16 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
16 minute ago
38 minute ago