Editorial / 2020 செப்டெம்பர் 11 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
கருத்தாழமிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு, மலையக மக்களுக்குப் பேரிழப்பு எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் தன்னுடன் பகிர்ந்து கொண்ட நகைச்சுவை சம்பவம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “1994ஆம் ஆண்டு, யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக முதல் தடவையாக தான் நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த போது, அமரர் ஆறுமுகம் தொண்மானும் நாடாளுமன்றுக்கு வந்திருந்தார். அன்றுமுதல், இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில், கட்சியின் தலைமைப் பதவியிலும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து, மலையக மக்களுக்கு மாத்திரமின்றி, இந்த நாட்டு மக்களுக்கே அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை, அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும்” என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், “கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டு மாடுகளின் தேவை குறித்து ஒருமுறை நான் தொலைப்பேசியிலே அவருடன் உரையாடியபோது, 'உங்களுக்குத் தேவையான மாடுகளை ஏற்றிக் கொண்டு, அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்' என நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார்” என்றும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago