2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கை சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு மன்ற கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிய கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .