Suganthini Ratnam / 2015 ஜூலை 29 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
சட்டவிரோதமான முறையில் சொட்கண் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரை திருகோணமலை 10ஆம் கட்டை கித்துள் உதுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிருக வேட்டைக்காக இந்தத் துப்பாக்கியை இவர் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .