Suganthini Ratnam / 2016 ஜூலை 15 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்ட நிலையில், இத்திறப்பு விழாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறி பெற்றோர் அக்கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரம் பாடசாலை திட்டத்துக்குள் தெரிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உங்களுக்கு இத்திறப்பு விழாவில் மாலை தேவையா உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago