Editorial / 2026 ஏப்ரல் 15 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராஜா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரித்திச்சேனை சந்திப் பகுதியில், விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கல்லடி விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து வவுணதீவு தாண்டியடி முகாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி, பரித்திச்சேனை சந்திக்கு அருகில் வந்தபோது எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசேட அதிரடிப்படை ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago