A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றுபவர்களுக்கு நிரந்தர ஊழியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நேற்று சனிக்கிழமை (28.8.2010) விஜயம் செய்த, கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள தற்காலிக ஊழியர்கள் சந்தித்து நிரந்தரமாக்குவதற்கான மகஜர் ஒன்றை கையளித்தபோதே மேற்படி உறுதிமொழியினை அவர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 45 ஊழியர்கள் கடந்த 1998ஆம் ஆண்டு தொடக்கம் 12வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
18 minute ago