Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 29 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 77 பேரும், சர்வதேச கடல் எல்லையில் வைத்து, இந்தியக் கடலோர காவற்படையினரிடம், நேற்று வியாழக்கிழமை (28) ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் கப்படன் அக்ரம் அலவி, இன்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன் மாதம் முதல் இம் மாதம் வரை இலங்கை கடலோர காவல்படையினரால் 77 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த மீனவர்கள் அனைவரும் அநுராதபுரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 25ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்பெற்ற அறிவுறுத்தலுக்கு அமைய, 77 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 43 மீனவர்கள், மன்னார் கடற்பரப்பில் கைதான 22 மீனவர்கள் மற்றும் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்கள் உட்பட அனைவரும் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வியாழக்கிழமை (28) அனைத்து மீனவர்களும், காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, கடற்படையின் கப்பல் மூலம் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago