Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

நலன்புரி நிலையங்களில் இருந்து மீள்குடியேறிய குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 4 குடும்பங்களுக்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவினால் வீடமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
கொமர்ஷல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் ரவி டயஸ், யாழ். மாவட்ட நீதவான் ஆர். வசந்தசேனன், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, 52 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அனுர சுதசிங்க, 522 ஆவது பிரிவு தளபதி ஹேமந்த பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.





7 hours ago
25 Oct 2025
ajanth Wednesday, 03 November 2010 12:07 AM
இது ரால் போட்டு சுறா பிடிக்கிற வேலைதான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025