Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
இலங்கையில் போருக்கு பின்னரான அபிவிருத்தி நோக்கிய விஞ்ஞானமும் முகாமைத்துவமும் என்னும் தலைப்பிலான ஒரு நாள் ஆராய்ச்சி ஆய்வரங்கு நாளை புதன்கிழமை வவுனியா கண்டி வீதியில் உள்ள திறந்த பல்கலைக்கழக மண்டபத்தில் வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் என்- நந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி-பாலசுந்தரம்பிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். மூன்று அமர்வுகளில் 44 ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா வளாகத்தினால் நடத்தப்படும் மூன்றாவது வருட ஆய்வரங்கம் இதுவாகும்.
3 hours ago
8 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
13 Nov 2025