Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 10 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எஸ்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, உள் வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.
பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றும் மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இன்று (10) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆகக் கூடிய 75.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலைய கண்காணிப்பாளர் எம்.ஏ.எம். அக்மல் தெரிவித்தார்.
பாணமை பிரதேசத்தில் 70.9 மில்லிமீற்றரும், அம்பாறை பிரதேசத்தில் 67.8 மில்லிமீற்றரும், தீகவாபி பிரதேசத்தில் 64.5 மில்லிமீற்றரும், எக்கல்ஓயா பிரதேசத்தில் 49.5 மில்லிமீற்றரும், சாகாமம் பிரதேசத்தில் 42.1 மில்லிமீற்றரும், இலுக்குச்சேனை நீர்ப்பாசன குளத்தில் 39.2 மில்லிமீற்றரும், லகுகல பிரதேசத்தில் 26.2 மில்லிமீற்றரும், ரூபஸ்குளத்தில் 25.4 மில்லிமீற்றரும், இங்கினியாகல நீர்ப்பாசனக் குளத்தில் 25.02 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago