2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய நிர்வாகம் தெரிவு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021/2022 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்,  கல்முனை நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று (11) நடைபெற்றது.

இதன்போது, கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய  தலைவராக மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் தெரிவுசெய்யப்பட்டார். 

அத்துடன், செயலாளராக ஆரிக்க காரியப்பரும் பொருளாளராக எம்.ஜே. ஜவாட் நிஷாத் உட்பட 23 நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

கல்முனை பிரதேசத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .