2025 மே 15, வியாழக்கிழமை

செஞ்சிலுவை சங்கத்தால் உதவியளிப்பு

Editorial   / 2020 மே 31 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்

கட்டார் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள வறிய மக்களுக்கான சுமார் 7 ஆயிரம் ரூபாய் பெறுமதியான  உலருணவு நிவாரண பொருள்கள், சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்று (30)  காலை வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளை தலைவர் சுனில் திஸ்ஸாநாயக்க, சவளக்கடை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரப் , செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளை நிர்வாக உத்தியோகத்தர் சந்திரிக்கா அபேரத்ன, செஞ்சிலுவை சங்கத்தின் ஊழியர்கள் ,பொலிஸார், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .