2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு நீடிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக  ஆயுதங்களை வைத்திருப்போர் பொலிஸாரிடம் கையளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்திலுள்ள பொது அமைப்புக்கள் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எட்ஸன் குணரட்னவிடம் விடுத்த
வேண்டுகோளுக்கிணங்க இக்காலக்கெடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் சமயத் தலங்களினூடாக பொலிஸ் நிலையங்ககளில் ஒப்படைக்க முடியும்.

எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பின்னர் சட்டவிரோத ஆயுதங்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

31ஆம் திகதிக்குப் பின்னர் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ மா அதிபர் எட்ஸன் குணரட்ன தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .