2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரின் அதிபருக்கு பிரியாவிடை

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரின் அதிபராகக் கடமையாற்றிய எஸ்.எல்.அப்துல் றஹீம் இடம்மாற்றம் பெற்றுச் செல்வதையொட்டி அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்விச் சமூகத்தினர் வழங்கிய பிரியாவிடை வைபவம் நேற்று சனிக்கிழமை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் தற்போதைய அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் றஹீம் - மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரால் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வைபவத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பேசுகையில்:

முன்னாள் அதிபர் எஸ்.எல்.றஹீம் ஆழ்ந்த கல்விச் சிந்தனையுடையவர். இவர் எனது நண்பர் என்பதற்கப்பால் சிறந்த ஆலோசகர். ஓர் உன்னதமான பாடசாலையை உருவாக்கும் அத்தனை திட்டங்களையும் கொண்டவர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .