2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஊடகவியலாளர் மீது மாநகர சபை உறுப்பினர் தாக்குதல்

Super User   / 2011 ஜனவரி 05 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர், மருதமுனை பிரதேசத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றபோதே  தாக்கப்ட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் காதர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0

  • naseem Thursday, 06 January 2011 02:48 PM

    பாவம் ஊடகவியலாளர் காதர். கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் அட்டகாசம் இன்னும் முடியவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .