2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கடலில் இழுத்துச்செல்லப்பட்ட மீனவரின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை

Super User   / 2011 ஜனவரி 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

பெரிய கல்லாறு கடற் பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடல் அலையில் கடந்த புதன்கிழமை இழுத்துச்செல்லப்பட்ட சடலம் இதுவரை கண்டுபிடிக்;கவில்லை.

புதன்கிழமை மாலை தனது மகனுடன் பெரியகல்லாறு கடற்கரையில் வலை வீசிக்கொண்டிருந்தபோது திடீரென ஏறப்பட்ட பாரிய அலையில் குறித்த மீனவர் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

மருதமுனை,மசூர் மௌலானா வீதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான நா.ஜமால்தீன் (62வயது) என்ற மீனவரே கடலில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .