2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கருவாடுகளை திருடி விற்பனை செய்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜூலை 18 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை கடற்கரையில் உலரவைத்த திருக்கை மீன் கருவாடுகளை திருடிச்சென்று சந்தையில் விற்பனை செய்ததாக கூறப்படும் இருவர் 20 கிலோ கருவாடுகளுடன் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

தங்களுக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து,  அம்பாறை நகர் வாராந்த சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைக்குடி வாசிகளான இந்த இருவரும் கல்முனை கடற்கரையில் மீனவர்கள் உலரவைத்த கருவாடுகளை இரவு வேளையில் திருடிச் சென்று  வாராந்த சந்தையில் விற்பனை செய்ததாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை நகர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • risimb Monday, 18 July 2011 09:55 PM

    "''''ஹய்யோ! ஹய்யோ!"''''

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 19 July 2011 02:29 AM

    எவ்வளவு விரைவாக சரக்கை சந்தைப்படுத்யுள்ளனர் . திறமையான விற்பனை முகவர்கள் .பேசாமல் இருவரையும் அந்த கருவாட்டு விற்பனையாளர்களாக நியமித்தால் என்ன ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7