2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எருமை மாட்டிறைச்சி விற்பனை செய்ய முற்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 20 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை பிரதேசத்தில்  சட்டவிரோதமாக  எருமை மாட்டிறைச்சிகளை விற்பனை செய்ய முற்பட்ட மூவருக்கு  தலா 20,000  ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த கல்முனை நீதிபதி, கைப்பற்றப்பட்ட இறைச்சியை அழிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை  கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

காட்டுப்பகுதியில் வைத்து இரு எருமை மாடுகளை வெட்டி அதன் இறைச்சிகளை   விற்பனைக்காக  கொண்டு சென்றபோது நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில்  இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன்,  அவர்களிடமிருந்த இறைச்சிகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X