2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பள்ளிவாசல்கள் உடைப்பு, ஹலால் விவகாரம்: கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அப்துல் அஸீஸ்

இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடர்பாகவும் ஹலால் இலட்சனை பயன்பாடு தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை  கையளிப்பதற்கான பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது. 

மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில நேற்று நடைபெற்றது. இதன்போதே பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடரில் அனுராதபுரத்தில் மல்வத்து ஓயா எனும் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை இனவாத கும்பலொன்று நள்ளிரவு வேளையில் தாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, சில பௌத்த பிக்குகள் 'ஹலால்' என்ற வாசகத்தை உபயோகப்படுத்தக் கூடாது என துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு பாதயாத்திரைகளை நடத்திவருகின்றனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் ஹலாலான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படை கொள்கையோடு தொடர்புபட்ட விடயம். தத்தம் மதத்தை பின்பற்றுகின்ற மத சுதந்திரமுள்ள  இந்த ஜனநாயக இலங்கை நாட்டில் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களிற்கும் எதிராக குறிப்பிட்ட சிலரால்  மேற்கொள்ளப்படுகின்ற மேற்படி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதியின்  உதவியினை கோரியே இந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் சபையில் முன்வைக்கப்பட்டு பிரேரணை  உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொல்லப்படது.

  Comments - 0

  • abdullah Tuesday, 15 January 2013 04:11 AM

    allah will help ur movments

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X