2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் மத்துட்ட, நில்தண்டாஹின்ன, வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பின்வரும் பகுதிகளுக்கு 2ம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்:

  • பதுளை
  • சொரணத்தோட்டை
  • ஹாலி எல
  • பசறை
  • லுணுகலை
  • மீகஹகிவுல
  • கந்தகெட்டிய

கண்டி மாவட்டம்:

  • கங்கவட்ட கோரளை
  • பாதஹேவாஹெட்ட
  • அக்குரணை
  • யட்டிநுவர
  • தும்பனே
  • ஹாரிஸ்பத்துவ
  • பூஜாப்பிட்டிய
  • பஸ்பாகே கோரளை
  • ஹதரலியத்த
  • குண்டசாலை
  • உடுநுவர
  • தெல்தோட்டை
  • பாததும்புர
  • பன்வில
  • உடபலாத
  • கங்க இஹல கோரளை

குருநாகல் மாவட்டம்:

  • ரிதிகம

மாத்தளை மாவட்டம்:

  • நாவுல
  • இரத்தோட்டை
  • அம்பகங்க கோரளய
  • உக்குவளை
  • வில்கமுவ
  • யட்டவத்த
  • மாத்தளை
  • பல்லேபொல
  • லக்கல பல்லேகம

நுவரெலியா மாவட்டம்:

  • நுவரெலியா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X