2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கடலில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 23 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்

பொத்துவில் கோமாரி முகத்துவாரம் கடல் பிரதேசத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்

அக்கரைப்பற்று 7ம் பிரிவு செம்பாப்போடியார் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய மோகனதாஸ் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் கடற்படையினரின் சுழிஓடிகள் சடலத்தை மீட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X