2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுரங்கம் இடிந்து விபத்து: 8 தொழிலாளர்களை மீட்கும்பணி தீவிரம்

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாவில், சுரங்கம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

தெலுங்கானா மாநிலம் - நாகர்கர்னூல் மாவட்டம், அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அணையில் உள்ள தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்வதற்கு, சனிக்கிழமை (22) மாலை தொழிலாளர்கள் 8 பேர்  சுரங்கத்துக்குள் சென்றுள்ளனர்.

தொழிலாளர்கள் தங்கள் பணியை செய்துகொண்டிருந்தபோது, திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், பொலிஸார், தீயணைப்புப்படையினர் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X