Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானாவில், சுரங்கம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம் - நாகர்கர்னூல் மாவட்டம், அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அணையில் உள்ள தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்வதற்கு, சனிக்கிழமை (22) மாலை தொழிலாளர்கள் 8 பேர் சுரங்கத்துக்குள் சென்றுள்ளனர்.
தொழிலாளர்கள் தங்கள் பணியை செய்துகொண்டிருந்தபோது, திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், பொலிஸார், தீயணைப்புப்படையினர் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago