Freelancer / 2026 மார்ச் 01 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்தநாடு தொடர்ச்சியான இணைய முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக 'நெட் பிளொக்ஸ்' இணைய கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரானின் உட்பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல்களைப் பெறுவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், மிகச் சில வழிகளில் மட்டும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஈரான் இவ்வாறான இணைய முடக்கத்தை அமுல்படுத்துவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னரும் முக்கிய தருணங்களில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற 12 நாள் போரின் போது இணையம் துண்டிக்கப்பட்டது. (a)
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago