Freelancer / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவில், 5,000 அரியவகை எறும்புகளுடன் 2 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் உள்ள காடுகளில் பல்வேறு விதமான அரிய வகை பறவைகள், பூச்சி இனங்கள், மிருகங்கள் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியில் வாழும் அரிய வகை பூச்சியினங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் நைரோபியில், வெளிநாட்டினர் தங்கும் வணிக விடுதிகளில் போலீசாருடன் இணைந்து வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டல் அறையில் 'டெஸ்ட் டியூப்'களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எறும்புகளை கைப்பற்றினர்.
இவ்வாறு சோதனை குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அரியவகை எறும்புகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
33 minute ago
40 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
3 hours ago
05 Nov 2025