2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்க்கும் பலுசிஸ்​தான்

Freelancer   / 2025 மே 13 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்​தி​யா​வின் ஆதரவை நாங்​கள் பெற்​றால் இந்த தீவிர​வாத அரசை (பாகிஸ்​தானை) பலூச் தேசத்​தால் ஒழிக்க முடி​யும் என, பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது.

மேலும், இது, அமை​தி​யான, வளமான மற்​றும் சுதந்​திர பலுசிஸ்​தான் உரு​வாக வழி வகுக்​கும் என்றும், பிஎல்ஏ கூறியுள்ளது.

 பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி, “பலுசிஸ்​தான் விடு​தலைப் படை” (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யல் பிஎல்ஏ செய்​தித் தொடர்​பாளர் ஜீயந்த் பலூச், திங்கட்கிழமை (12) கூறுகை​யில், 

‘‘இந்​தியா - பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் இராணுவம் மற்​றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை பிஎல்ஏ நடத்​தி​யது.

“சமீபத்​திய இந்த தாக்​குதல் 51க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பல மணி நேரம் நீடித்​தது. எதிரியை அழிப்​பது மட்​டுமே இந்த தாக்​குதலின் நோக்​கமல்ல. தற்​காப்பு நிலைகள் மற்​றும் தயார்​நிலையை வலுப்​படுத்​து​வதும் இதன் நோக்​க​மாகும்” என்​றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .