Freelancer / 2022 டிசெம்பர் 31 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் தனது இறுதிக்காலத்தை கழித்திருந்தார்.
கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்திய அவர், 2013 இல் தனது பதவியை இராஜினாமா செய்ததுடன், 1415 இல் போப்பாண்டவர் 12ஆம் கிறகெரிக்கு பின்னர் இராஜினாமா செய்த முதல் பாப்பரசராக அறியப்படுகிறார்.
ஜோசப் ராட்ஸிங்கர் என்ற இயற்பெயருடன் ஜேர்மனியில் பிறந்த அவர், 78 வயதில் ( 2005 ஆம் ஆண்டு) தெரிவுசெய்யப்பட்ட மிக வயதான பாப்பரசர் என்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago