Editorial / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}


பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பும் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக சுமார் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்போது அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
கடந்த பிப்ரவரி 28-ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியால், கடந்த இரண்டு வாரங்களாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இந்த போர் நிறுத்தம் வரும் 21-ம் திகதியுடன் முடிவடையுள்ள நிலையில், நிரந்தரத் தீர்வுக்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
தோல்வியடைந்த பேச்சுவார்த்தை: கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். இது மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் முக்கியத்துவம்: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், "ஜனாதிபதி ட்ரம்ப்புடன் பேசினேன். மேற்கு ஆசிய நிலவரம் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்தும் ஆலோசித்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்டெல் கூறுகையில், இப்பிரச்சினையில் இந்தியாவின் சமரச முயற்சியை அமெரிக்கா முழுமனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை (ஏப்ரல் 16) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படாத போதிலும், அமைதி திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago