Freelancer / 2023 ஜூலை 03 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர்கள் சபை வெற்றிக் கிண்ணத் தொடரில் பாலமுனை அரபா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
பாலமுனை பொதுமைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒலுவில் லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்றே அரபா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அரபா விளையாட்டுக் கழகம் ஐந்து ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 66 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லெவிண் ஸ்டார் ஐந்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களையே பெற்று ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது.
சம்பியனான அரபா விளையாட்டுக் கழகத்துக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இரண்டாமிடத்தைப் பெற்ற லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு 15,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
14 minute ago
27 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
46 minute ago