Shanmugan Murugavel / 2023 ஜனவரி 29 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஆர். ஜெயஸ்ரீராம்

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பேத்தாழை விபுலானந்த கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த மெய்வல்லநனர் இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு ஆண்கள், பெண்களுக்கான மரதனோட்டப் போட்டியானது பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்புடன் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று நடைபெற்றது.
ஆண்கள் பிரிவில் க. ஜெபர்சன் என்ற மாணவனும், பெண்கள் பிரிவில் திலக்சனா என்ற மாணவியும் முதலாமிடத்தனைப் பெற்றனர்.
இம்மாத இறுதியில் ஏனைய மைதான விளையாட்டு நிகழ்வுகளும் அடுத்த மாதம் 19ஆம் திகதியன்று சைக்கிள் ஓட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு மாணவர்களின் விளையாட்டு திறன்களை திறமையான இடத்துக்கு கொண்டு சென்று தேசிய மட்டம் வரை சென்று வெற்றி பெறவேண்டும் என்பதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதாக கல்லூயின் அதிபர் சி. முருகவேல் தெரிவித்தார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026