Freelancer / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
எஹலியகொடை பரகடுவ முப்படையினரின் ஓய்வுபெற்ற சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழு பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை (19) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் பரகடுவ நாரத கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மேற்படி போட்டியில் கல்வி மற்றும் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்திய பரகடுவ பிரதேச மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
.
இந்நிகழ்வில் எஹலியகொட உள்ளூராட்சி சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹரிஸ் கிரியெல்ல உட்பட ஓய்வுபெற்ற முப்படையினரும் கலந்து கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .