2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலையை இறுதிக்கு அழைத்துச் சென்ற ஞானரூபன்

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    குணசேகரன் சுரேன், நா.நவரத்தினராசா


இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியினை செபமாலைநாயகம் ஞானரூபன் அழைத்துச் சென்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் முதன்முறையாக யாழ்;;ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (08) தொடக்கம் இடம்பெற்று வருகிறன.

இலங்கையின் 14 பல்கலைக்கழகங்களின் அணிகள் பங்குபற்றும் இந்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் முதற்சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானம் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றன.

தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றன.

காலையில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து கிழக்குப் பல்கலைக்கழக அணி மோதியது.

போட்டி ஆரம்பம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி ஆதிக்கம் செலுத்திய போதும், கோல்கள் எதுவும் பேடப்படவில்லை..

தொடர்ந்து, இரண்டாவது பாதியாட்டத்தில் எதிரணியின் பின்கள வீரர்களை, ஏமாற்றி ஞானரூபன் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை முன்னிலைப்படுத்தினார்.

இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை இடம்பெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதியாட்டம் ஊவாப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி மோதிவருகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .