2025 ஜூலை 09, புதன்கிழமை

கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் முடிவடைந்தது

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணிக்கும் கல்பிட்டி பேர்ல்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

புத்தளம் கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட, புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட போட்டி வெள்ளிக்கிழமை (10) புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில், கடும் போராட்டத்துக்கு பின் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி  ஒரு கோலை போட்டது. மீண்டும் இடைவேளைக்கு பின்னர் புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணி ஒரு கோலினை போட்டு போட்டியை சமநிலையில் முடித்தது.

இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றுக்கொண்டன.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். நௌபி, ஏ.ஓ. அஸாம், எம்.ஓ. ஜாகீர் ஆகியோர் கடமையாற்றினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .