Janu / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் - 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவைச் சேர்ந்த திருமணமாகாத 62 வயது மதிக்கத்தக்க மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை(20) மாலை மணல் அகழ்வு வேலைக்குச் சென்ற நிந்தவூர், 21ஆம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்ற குடும்பஸ்தரும் யானை தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

14 minute ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
03 May 2026