Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜுன் மாதத்திற்குமுன் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் உத்தரவாதமளித்தால் அரசாங்கத்திற்கு தான் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவளிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
பஸ்ஸரயில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பாதுகாப்புப் படைகள், பொலிஸ், கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர்கூறினார்.
இலங்கையர்கள் மும்பையில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியால் ஈர்க்கப்பட்டிருந்த நிலையில் அதை எரிபொருட்கள் மற்றும் காஸ் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டதாகவும் ரணில் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago