2026 மே 07, வியாழக்கிழமை

'இந்திய மீனவர்களுடன் தொடர்பை பேண வேண்டாம்'

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றின் ​வேகம்    அதிகரித்து வருவதால், சர்வதேச கடல்பரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத்  தவிர்த்துகொள்ளுமாறு மீன்பிடி திணைக்களமானது, வடக்கு மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய இந்திய மீனவர்களுடன்  கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பொருள்கள் பரிமாறுதல் போன்ற எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாமென்றும்  மீன்பிடி​ திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிலிருந்து மஞ்சள் மற்றும் சட்டவிரோத பொருள்களைக் கொண்டு வருவதையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .