2026 மார்ச் 04, புதன்கிழமை

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான யாசகர்

Freelancer   / 2023 ஜூலை 08 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் வாழும் செல்வந்த யாசகர் இந்தியாவின் மும்பாய் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார யாசகர் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது சொத்து மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாய் எனவும், மாத வருமானம் இந்திய மதிப்பில் 60,000 முதல் 75,000 ரூபாய் வரை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நபருக்கு 1.2 கோடி ரூபாய் பெறுமதியான அடுக்குமாடி குடியிருப்பும், மாதாந்தம் 30000 இந்திய ரூபாய் வாடகை பெறும் அளவில் இரண்டு வர்த்தக நிலையங்களும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .