R.Maheshwary / 2021 மே 23 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரம் ,அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ள தொடர்மாடி குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களில் இன்றைய தினம் ட்ரோன் கமெரா மூலம் விசேட கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தோட்டங்கள் மற்றும் தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாகவும் இதனை கண்காணிப்பதற்காகவே, ட்ரோன் கமெரா பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட படையணி மற்றும் அந்தந்த பிரதேச பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் கைதுசெய்யப்படுவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
25 minute ago
33 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
44 minute ago