Editorial / 2024 மார்ச் 01 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்ட சாந்தன் எனப்படும் டி.சுரேந்திரராஜாவின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையம், விமான சரக்கு முனையத்திற்கு வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டது.
T. சுரேந்திர ராஜா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து, பின்னர் பொதுமன்னிப்பு பெற்றார், பின்னர் இந்தியாவின் சென்னையில், அவர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, இலங்கையில் உள்ள தனது தாயாரைப் பார்க்கவிருந்தார்.
"ராஜீவ் காந்தி" மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-122 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 03/01 பகல் 11.35 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டது.
சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதுடன், சடலத்தை விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் சிலவற்றை சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.
அந்த ஆவணங்கள் கிடைக்கும் வரை, 03/01 பிற்பகல் 03.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் சடலம் வைக்கப்பட்டிருந்ததுடன், ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .