2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சிங்கபூர் செல்ல அனுமதி கேட்டார் கோட்டா

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வைத்திய பரிசோதனைக்காக, சிங்கபூர் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி​க்கோரியுள்ளார்.

ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே சிங்கபூருக்குச் செல்வதற்கு அனுமதிகோரியுள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது, நிதி மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு, தடைச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .