2026 மே 11, திங்கட்கிழமை

dd

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

Simrith   / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக நற்சான்றிதழ்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.  

வெளிவிவகார அமைச்சில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவருடனான சந்திப்பின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இலங்கையில் தூதரகங்களை நிறுவுவதற்கு பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த புதிய உடன்படிக்கைகளை எட்டுவதற்கும் பிரதிநிதிகள் முன்மொழிந்தனர்.

ஒப்பந்தங்களை ஆய்வு செய்து மறுஆய்வு செய்ய அமைச்சர் ஒப்புக்கொண்டார். 

புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு,ஜோர்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், கொங்கோ குடியரசு, கினியா குடியரசு மற்றும் புதிய கென்யா குடியரசு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதர்கள் மற்றும் புதிய உயர் ஸ்தானிகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .