Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 26 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில், மேலும் நால்வர் மரணித்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றின் மரணம் 287 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய அறிக்கையின் பிரகாரம் மரணமடைந்த நால்வரில் இருவர் பெண்களாவர். அதில் 43 வயதான பெண் தெரணியகலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அந்தப் பெண், ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஜனவரி 24 ஆம் திகதியன்று மரணமடைந்தார் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 வயதான மற்றைய பெண், பேருவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். மஹரகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அப்பெண், ஜனவரி 25ஆம் திகதியன்று மரணமடைந்துள்ளார்.
ஏனைய இரண்டு ஆண்களில் ஒருவர் வரகாகொட பிரதேசத்தையும் மற்றையவர் கொழும்பு-08 ஐச் சேர்ந்தவரும் ஆவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago