2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பட்டப்பகலில் ரூ. 18 இலட்சம் கொள்ளை

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், அம்பலாங்கொடை நகரில் வைத்து, பெண்ணொருவரிடமிருந்து 18 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாயினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (22) நண்பகல், இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த பணத்தை மீளப்பெற்றுள்ள மேற்படி பெண், அதனை மற்றுமொரு வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்ற போதே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் கூறினர்.

முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய வகையில் தலைக்கவசம் அணிந்தவாறு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே, குறித்த பெண்ணுக்கு கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, மேற்படி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X