2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாணவர்கள் மீது தாக்குதல்: 12 பேர் காயம்

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

பேரதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ஆம் வருட தமிழ் மாணவர்கள் மீது பெரும்பான்மையின மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 12 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தமிழ் மாணவர்கள், குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து  2ஆம் வருட பெரும்பான்மையின  மாணவர்கள் வழிமறித்துள்ளனர்.

அத்துடன், தம்மிடமிருந்த பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ், முஸ்லிம் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக திங்கட்கிழமை (22) மாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்த காயங்கள் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X