2026 மார்ச் 30, திங்கட்கிழமை

ராஜபக்ஷ, ஓமானில் சிக்கினார்

Editorial   / 2026 மார்ச் 30 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

38 வயதான ராஜபக்ச பாதிரனலகே பிரபாத் மதுசங்க என்ற மிதிகம சுட்டி, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் தீவிர உறுப்பினர் ஆவார்.

இவர் 30/03 அன்று அதிகாலையில் சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

கொலை, கொள்ளை, துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இலங்கையின் பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மிதிகம சுட்டியைக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் படைகளால் சர்வதேச சிவப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஓமானில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இலங்கை காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று ஓமானின் மஸ்கட் நகருக்குச் சென்று, 30ஆம் திகதி அதிகாலை 04.27 மணிக்கு ஸ்லாம் ஏர் விமானம் OV-437 மூலம் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்தது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .